சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய படம் 'லால் சலாம்' சமீபத்தில் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருந்தார்கள். ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படத்தின் ஹார்ட்டிஸ்க் காணாமல் போனதாகவும், இதனால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், அதனால் தான் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஐஸ்வர்யா எந்த பதிலும் கூறவில்லை. படக் குழுவினர் மறுத்து வந்தார்கள். இதுகுறித்து மனம் திறந்து பேசி உள்ளார் ஐஸ்வர்யா.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் “படத்தின் ஹார்ட்டிஸ்க் காணாமல் போனது உண்மைதான். 21 நாள் நடத்திய படப்பிடிப்பு காட்சிகள் அந்த ஹார்ட்டிஸ்கில் இருந்தது. எல்லாமே படத்தின் முக்கியமான காட்சிகள், இது தவிர இன்னும் சில காட்சிகள் அழிந்து விட்டது. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி அந்த காட்சிகளை படமாக்க நினைத்தோம். ஆனால் நடித்தவர்கள் வேறு படங்களுக்கு சென்று விட்டார்கள். மீண்டும் அனுமதி வாங்குவதில் நிறைய சிக்கல்கள இருந்தது. இப்படி பல பிரச்சினைகள் இருந்ததால் இருக்கிற காட்சிகளை வைத்து சில சமரசங்களோடுதான் படத்தை முடித்தோம். அந்த ஹார்ட்டிஸ்க் மட்டும் காணாமல் போகாமல் இருந்திருந்தால் நான் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லியிருப்பேன். இந்த நிகழ்வு எனக்கு ஒரு பாடமாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.