பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து விரைவில் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் ஹிந்தியில் 'கர்ணா' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது.
இந்த நிலையில் புதிதாக சூர்யா, ‛இன்று நேற்று நாளை, அயலான்' படங்களின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்திற்கான கதை விவாத பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.




