கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
நடிகர் அஜித் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆக்ஷன் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில் படமாகி வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு சற்று ஓய்வு கிடைத்த நிலையில் சென்னை திரும்பினார் அஜித். தனது மகனின் பிறந்தநாளையும் கொண்டாடினார். விரைவில் ‛விடாமுயற்சி' படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் பறக்க உள்ளார்.
இந்நிலையில் அஜித் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வழக்கமான உடல் பரிசோதனை என கூறுகிறார்கள். மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல உள்ளதால் உடல் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலையோ அல்லது நாளைக்குள் வீடு திரும்புவார் என்கிறார்கள்.