சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் இடையேயான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்தது. கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை வெகு விமர்சையாக நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்த் குடும்பத்தினரும், இயக்குனர் அட்லி குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்வுகள் முடிந்ததும் ரஜினி தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் தனி ஜெட் வகை சொகுசு விமானத்தில் சென்னை திரும்பினார். விமானத்தில் அமர்ந்து பயணிக்கும் படத்தை ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "விழாவில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பும் அன்பான கவனிப்பும் கொடுத்த நீதா மற்றும் அம்பானி ஆகியோருக்கு நன்றி. அனந்த் மற்றும் ராதிகாவின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் ஒரு மேஜிக் போல இருந்தது. பசுமையான நினைவுகளுக்கு நன்றி. அம்மா, அப்பாவுடன் மகிழ்ச்சியாக வார இறுதி நாட்களைக் கழித்தேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஜாம் நகரில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, அம்பானி இந்தியாவின் பெருமை எனவும் வைகுண்டம், கைலாசத்தை அம்பானி குடும்பம் இந்த நிகழ்வு மூலம் உலகிற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த ஜெட் விமானம் அம்பானி குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், ரஜினியை கவுரவப்படுத்த இந்த பயணத்தை அம்பானி குடும்பம் ஏற்பாடு செய்ததாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.