பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் |
‛ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக்' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். சினிமா தாண்டி விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். கார் ரேஸிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அண்மையில் இவருக்கு தாராளமாக ஒரு நபர் பணம் செலவிட்டு வருவதாக சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ பரவியது. இதுதொடர்பாக நிவேதா வெளியிட்ட நீண்ட விளக்கம்...
சமீபகாலமாக எனக்கு பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்தி பரவுகிறது. இப்படி பேசுவர்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கும் முன் மனிதநேயத்துடன் அந்த தகவலை சரிபார்ப்பார்கள் என அமைதி காத்திருந்தேன். கடந்த சில நாட்களாக நானும், எனது குடும்பமும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள்.
நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் இருக்கிறோம். 16 வயதில் இருந்தே சுயமாக சம்பாதித்து வருகிறேன். சினிமாவில் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இதுவரை யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டது இல்லை. எல்லாம் தானாக அமைந்தது. பணத்தின் மீது பேராசை கொண்டதில்லை.
என்னைப்பற்றி வெளியான தகவல் எதுவும் உண்மையில்லை. 2002 முதல் துபாயில் வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். 2013ல் இருந்து ரேஸில் எனக்கு ஆர்வம் உண்டு. சென்னையில் நடத்தப்படும் ரேஸ் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்த பிறகு ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன்.
உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே நான் கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நான் இதை சட்டரீதியாக எதிர்கொள்ளவில்லை. காரணம் இன்னும் பத்திரிகையில் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது. அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் நற்பெயரை கெடுக்கும் முன்பு அந்த தகவலை உறுதி செய்யும்படி பத்திரிகையாளர்களை கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.