பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி | ஓடிடி நிறுவனங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வைக்கும் செக் | இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் |
தெலுங்கு திரையுலகில் கதாநாயகிகள் சிலர் திடீர் திடீரென புகழ் வெளிச்சம் பெற்று முன்னணி வரிசைக்கு உயர்ந்து வருகின்றனர். அப்படி ராஷ்மிகா மந்தனா, கிர்த்தி ஷெட்டி ஆகியோரை தொடர்ந்து சமீப காலமாக பிரபலமாகி உள்ளவர் நடிகை ஸ்ரீ லீலா. சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி வரிசைக்கு உயர்ந்துள்ளார். இந்த படத்தில் இவர் அதிரடியாக குத்தாட்டம் போட்ட குர்ச்சி மடத்தப்பெட்டி என்கிற பாடல் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஸ்ரீ லீலாவுக்கு நடனத்தில் இன்னொரு பக்கமும் உள்ளது. அதுதான் கிளாசிக்கல் டான்ஸ். சிறுவயதில் இருந்தே முறைப்படி பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்து பல கச்சேரிகளில் அவர் பங்கு பெற்றுள்ளார். அந்த வகையில் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சமதா கும்ப் கொண்டாட்டத்திற்காக மீண்டும் மேடை ஏறி கிளாசிக்கல் நடனமாடியுள்ளார் ஸ்ரீ லீலா. இந்த நிகழ்வில் மூத்த பரதநாட்டிய கலைஞர் மஞ்சு பார்கவி உடன் இணைந்து நடனம் ஆடினார் ஸ்ரீ லீலா.
இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீ லீலா, “நான் எப்போது கிளாசிக்கல் நடனத்தை துவங்கினேன் என்பது உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ.. சிறு வயதிலேயே நான் துவங்கி விட்டேன். என்னுடைய குழுவுடன் சேர்ந்து பல கச்சேரிகளில், குறிப்பாக கோவில்களில் நடைபெறும் கச்சேரிகளில் கலந்து கொண்டுள்ளேன். அந்த காலகட்டங்களில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். மேலும் அவற்றை முழுமையாக அனுபவித்தேன். என்னுடைய உண்மையான பொழுதுபோக்காகவும் அது இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிளாசிக்கல் நடனமாடியது மிகவும் வித்தியாசமாக இருந்தது.. இது உங்களுக்காக என்னுடைய இன்னொரு பக்கம்” என்று கூறியுள்ளார்.