என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கன்னட நடிகையான பிரியங்கா திம்மேஷ் 6 ஆண்டுகளுக்கு முன்பு 'உத்தரவு மகாராஜா' படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் நடித்து முடித்துள்ள 'சத்தமின்றி முத்தம் தா' படம் நாளை வெளிவருகிறது. இந்த படத்தை கார்த்திகேயன் தயாரித்துள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார். ராஜ்தேவ் இயக்கி உள்ளார். ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி உள்ளது.
படத்தில் நடித்திருப்பது குறித்து பிரியங்கா திம்மேஷ் கூறும்போது, "சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம். இதற்காக நான் ஶ்ரீகாந்த் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்குத் தேவையான உழைப்பைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று சொன்னேன், சொன்னதைச் செய்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் நிறையப் படங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தப்படம் எனக்கு இதுவரை செய்த படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது" என்றார்.