ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா. 'அனிமல்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகையாக மாறிவிட்டார். ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளத்தில் பதிலளித்த போது தனது வருங்காலக் கணவர் பற்றிய 'உண்மை' ஒன்றை சொல்லியிருக்கிறார்.
ராஷ்மிகாவின் டில்லி ரசிகர்கள் என்ற எக்ஸ் கணக்கிலிருந்து, “ராஷ்மிகாவின் கணவராக வருவதற்கு ஒருவருக்கு என்ன தகுதிகள் வேண்டும். அவர் இந்தியாவின் தேசிய கிரஷ் என்பதால் அவரது கணவரும் ஸ்பெஷலானவர். அவரது கணவர் VD போல இருக்க வேண்டும். அதாவது Very Daring... அவரை பாதுகாக்க வேண்டும். அவரை நாங்கள் ராணி என அழைக்கிறோம், அதனால், அவரது கணவரும் ராஜாவாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ராஷ்மிகா, “அது மிகவும் உண்மையானது,” என்று பதிலளித்துள்ளார். ராஷ்மிகாவின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரசிகர்கள் VD என்றுதான் குறிப்பிடுவார்கள்.
ராஷ்மிகாவின் பதில் அவருக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இருக்கும் காதலை உறுதி செய்துள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ராஷ்மிகா தற்போது தமிழில் 'ரெயின்போ' படத்தில் நடித்து வருகிறார்.