தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மின்னல் முரளி என்கிற திரைப்படம் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் இணைந்து நடித்த இந்தப்படம் சூப்பர்மேன் கதையம்சத்துடன் உருவாகி இருந்தது. இயக்குனர் பஷில் ஜோசப் இந்த படத்தை இயக்கி இருந்தார். கிராமத்தில் இருக்கும் ஒரு சாதாரண மனிதர்களுக்கு திடீரென சூப்பர் மேன் பவர் கிடைக்கும்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலையும் அதன் விளைவுகளையும் மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இந்த படத்தை படமாக்கி இருந்தார்.
இந்த படத்தை பார்த்துவிட்டு பாலிவுட்டில் இருந்து கூட பலரும் பஷில் ஜோசப்பை பாராட்டினார்கள். இந்த நிலையில் தான் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சக்திமான் என்கிற படத்தை பஷில் ஜோசப் இயக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மின்னல் முரளியாக நடித்த டொவினோ தாமஸும் ஒரு பேட்டியில் சூசகமாக உறுதி செய்துள்ளார். ஆனாலும் இந்த படம் அடுத்த வருடம் தான் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.




