ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் தற்போது 'படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் இப்படம் உருவாகி வருகிறது.
அப்பா விஜயகாந்த்தின் உடல்நலக் குறைவு, மறைவு என அடுத்தடுத்து சோதனைகளால் இப்படத்தின் படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாமல் இருந்தார் சண்முகபாண்டியன். இந்நிலையில் 'மீண்டும் திரும்பிவிட்டேன்' என படத்தின் படப்பிடிப்புக்குத் திரும்பியது குறித்து புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்துள்ளார் சண்முகபாண்டியன்.
இப்படம் தவிர 'குற்றப்பரம்பரை' வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார் சண்முக பாண்டியன். அப்பா மறைவின் துயரத்திலிருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள சண்முக பாண்டியனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.