ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு |
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் தற்போது 'படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் இப்படம் உருவாகி வருகிறது.
அப்பா விஜயகாந்த்தின் உடல்நலக் குறைவு, மறைவு என அடுத்தடுத்து சோதனைகளால் இப்படத்தின் படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாமல் இருந்தார் சண்முகபாண்டியன். இந்நிலையில் 'மீண்டும் திரும்பிவிட்டேன்' என படத்தின் படப்பிடிப்புக்குத் திரும்பியது குறித்து புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்துள்ளார் சண்முகபாண்டியன்.
இப்படம் தவிர 'குற்றப்பரம்பரை' வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார் சண்முக பாண்டியன். அப்பா மறைவின் துயரத்திலிருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள சண்முக பாண்டியனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.