20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பூ. அதன் பிறகு 1988ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக உருவெடுத்தார் . கடைசியாக 1989ம் ஆண்டு ஹிந்தியில் பிரேம பதான் என்ற படத்தில் நடித்த குஷ்பூ தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஜர்னி என்று ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஹிந்தி நடிகர் நானா படேகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான் இணைந்திருப்பதை தனது எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ள குஷ்பூ, 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிப்பது புத்துணர்ச்சியை அளித்திருப்பதாகவும், நானா படேகருடன் நடிப்பது உற்சாகமளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.