லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் 'மறுபடியும் நீ' என்கிற முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி 14ந் தேதி மாலை 6 மணியளவில் வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது இந்த பாடல் நடிகர் சித்தார்த் குரலில் உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளனர். சித்தார்த் ஒரு சில நிகழ்ச்சிகளில் சில பாடல்களைக் பாடியுள்ளார். இது அல்லாமல் ஏற்கனவே ராமின் இயக்கத்தில் வெளிவந்த 'தரமணி' படத்தில் 'உன் பதில் வேண்டி' என்கிற பாடலை சித்தார்த் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.