என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சமீபகாலமாக புராண இதிகாச படங்களை மையப்படுத்தி முன்னணி ஹீரோக்களின் நடிப்பில் ஆதிபுருஷ், ஹனுமான் போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ராமாயண கதையை தழுவி ராமாயண் என்கிற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகிறது. பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக சீதா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் பணிகள் துவங்க தாமதமாகி வருவதால் வேறு படங்களுக்கு கால்சீட் கொடுப்பதில் பிரச்னை ஏற்படுவதாக கூறி நடிகை சாய்பல்லவி இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் படக்குழுவினர் சாய்பல்லவி தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்களாம்.