சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தெலுங்கில் தற்போது ராசாக்கர் என்கிற பெயரில் வரலாற்று படம் ஒன்று உருவாகி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஐதராபாத் உள்ளிட்ட சில சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய மறுத்து அடம் பிடித்தன. அப்போது சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியில் நிஜாம் மன்னர் மனம் மாறி இறங்கி வந்தபோது, நிஜாமின் படையிலிருந்த, 'ரசாக்கர்கள்' அதை ஏற்கவில்லை. அதனால் இந்திய ராணுவத்தை எதிர்த்து போராட தயாரான ரசாக்கர்கள் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிதறினார்கள் இந்த பின்னணியை வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தை யாத சத்யநாராயணா என்பவர் இயக்கி உள்ளார். படத்தில் மகரந் தேஷ்பாண்டே, ராஜ் அருண் ஆகியோருடன் நடிகர் பாபி சிம்ஹாவும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக வேதிகா மற்றும் அனுஸ்ரீரியா திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்டது குறித்து கங்கனா கூறும்போது, “நான் இந்த விழாவில் எதற்காக கலந்து கொண்டேன் என உங்கள் அனைவருக்கும் தெரியும். சர்தார் வல்லபாய் பட்டேலின் தீவிர அபிமானி நான். படக்குழுவினரின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பார்க்கும்போது நிச்சயமாக ஒரு அற்புதமான திரை அனுபவம் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் என தெரிகிறது” என பாராட்டி உள்ளார்.