'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தின் வெற்றி நடிகர் பிரபாஸிற்கு புது ரத்தம் பாய்ச்சி உள்ளது. அடுத்ததாக நாக் அஸ்வின் இயக்கத்தில் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து கல்கி 2898 ஏடி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக பிரபாஸ் நடிக்கும் படம் ஒன்றுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
சந்தோஷ் நாராயணனைப் பொறுத்தவரை பாடல்களுக்கு மட்டுமல்ல பின்னணி இசைக்கும் பெயர் பெற்றவர். அந்த வகையில் பிரபாஸிற்கு இந்த படத்தில் எதிர்பாராத பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன். அதில் அவர் கூறும்போது, “இந்த படத்தில் பிரபாஸிற்கு ஒரு மறக்க முடியாத, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிமுக இசையை கொடுக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.