'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தான் நடித்துக் கொண்டிருந்த சாகுந்தலம், குஷி படங்களை முடித்து விட்டு சிகிச்சை செய்து கொள்ள வசதியாக 6 மாதம் பிரேக் அறிவித்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை செய்து கொண்ட சமந்தா தற்போது பூரண நலம் பெற்றிருக்கிறார். என்றாலும் பூக்கள் உள்ளிட்ட நறுமணங்களில் அலர்ஜி இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். என்றாலும் அவற்றை கூடுமானவரையில் தவிர்த்து படப்பிடிப்பு ஏற்பாடுகளை செய்யும் வகையில் தனது பணி திட்டத்தை வகுத்துள்ளார்.
தற்போது ராஜ் -டிகே இயக்கத்தில் உருவாகும் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ள சமந்தா, அடுத்து ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 16வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவின் மகள் குஷி கபூர் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா நடிக்க இருக்கிறார். புஜ்ஜி பாபு இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் உருகாக இருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.