நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
லோக்சபா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அம்மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சில பல புதிய படங்கள் வெளியாகும். அதோடு பள்ளிப் படிப்பிற்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையும் ஆரம்பமாகும். எனவே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆறு வாரங்களுக்கு பல புதிய படங்கள் வெளியாகும்.
இந்நிலையில் அந்த சமயத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பரபரப்புக்கிடையில் மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படங்களைப் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். சினிமா போஸ்டர்கள் ஒட்ட இடம் கிடைக்காது. தேர்தல் பிரசாரங்களால் ஒவ்வொரு ஊருமே போக்குவரத்து நெரிசல், பரபரப்பு என இருக்கும். வெயிலின் தாக்கமும் இந்த வருடம் அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானால் அதற்கான கொண்டாட்டங்கள் வேறு இருக்கும்.
இத்தனை காரணங்களால் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாவதாக சொல்லப்பட்ட படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போக வாய்ப்புகள் உள்ளது.