ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். தெலுங்கில் முதல் முறையாக ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்க 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ராம் சரணின் 15வது படம் என இப்படம் பற்றி அறிவிக்கப்பட்டது. அந்த வருடத்தின் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் இப்படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது.
கடந்த வருட தீபாவளிக்கு இப்படத்தின் முதல் சிங்கள் 'ஜருகண்டி' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் இப்படம் இந்த 2024ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பவன் கல்யாண் நடித்து வரும் 'ஓஜி' படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 'கேம் சேஞ்சர்' படம் அந்த சமயத்தில் வெளியாக வாய்ப்பில்லை என டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தசரா சமயத்தில்தான் 'கேம் சேஞ்சர்' வெளியாகலாம் என்று தகவல் வெளியானது. படம் மேலும் தள்ளிப் போகும் தகவலைக் கேட்டு ராம் சரண் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள்.
இதையடுத்து இயக்குனர் ஷங்கரை கடுமையாக விமர்சித்து ராம் சரண் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவர்களை தயாரிப்பாளர் தில் ராஜு, ராம் சரண் ஆகியோர் சமாதானப்படுத்துவார்களா என்பது தெரியவில்லை.