வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்(76). அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னரும் கூட. இவர் அமெரிக்காவிலிருந்து ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அங்குள்ள முனிச் விமான நிலையத்தில் சுங்க துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அர்னால்டு அணிந்து வந்த விலையுர்ந்த கைகடிகாரம் சுவிஸ் நிறுவனத்தால் பிரத்யேமாக தயாரிக்கப்பட்டு அர்னால்டுக்கு வழங்கப்பட்டது. இதன் மதிப்பு 22 ஆயிரம் யூரோக்கள். இந்த கைகடிகாரம் பற்றிய விரபங்களை அர்னால்டு தரப்பில் சுங்க ஆவணங்களில் குறிப்பிடவில்லை. இதனால் சுங்க அதிகாரிகள் அர்னால்ட்டிடம் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கைகடிகாரத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக அர்னால்டு தெரிவித்தார். ஆனால் அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதையடுத்து அபராதம் மற்றும் வரி ஆகியவற்றை சேர்த்து 35,000 யூரோக்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அர்னால்டு தன்னிடம் கையில் பணம் இல்லை என்றும், ஆன்லைன் வாயிலாக செலுத்துவதாகவும் கூறி உள்ளார். ஆனால் அதிகாரிகள் பாதி தொகையை ரொக்கமாக தான் செலுத்த வேண்டும் என நிர்பந்தித்துள்ளனர். இதையடுத்து வங்கி ஏடிஎம் சென்று ரொக்க தொகையை எடுத்து வந்து அர்னால்டு செலுத்தினார். இதையடுத்து அவரை விமான நிலைய அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் கிட்டத்தட்ட 3 மணிநேரம் விமான நிலையத்தில் அர்னால்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




