ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. அங்குள்ள ஆக் ஷன் ஹீரோ என்று இவரை சொல்லலாம். 250க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் அஜித்தின் தீனா, விக்ரமின் ஐ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பா.ஜ. எம்பியாகவும் இருக்கிறார். இவரின் மகள் பாக்யாவிற்கும், ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று(ஜன., 17) திருமணம் விமரிசையாக நடந்தது.
பிரதமர் மோடி குருவாயூர் கோயிலுக்கு இன்று வருகை தந்த நிலையில் அப்படியே சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் மலையாள சினிமாவின் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.