நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. அங்குள்ள ஆக் ஷன் ஹீரோ என்று இவரை சொல்லலாம். 250க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் அஜித்தின் தீனா, விக்ரமின் ஐ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பா.ஜ. எம்பியாகவும் இருக்கிறார். இவரின் மகள் பாக்யாவிற்கும், ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று(ஜன., 17) திருமணம் விமரிசையாக நடந்தது.
பிரதமர் மோடி குருவாயூர் கோயிலுக்கு இன்று வருகை தந்த நிலையில் அப்படியே சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் மலையாள சினிமாவின் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.