திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" |
வடசென்னை பகுதியில் எப்போதும் புறா பந்தயங்கள் நடந்து வருகின்றன. இதன் பின்னணியில் ஏற்கனவே பல படங்கள் தயாராகி இருக்கிறது. குறிப்பாக தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் புறா பந்தய பின்னணி கதைக்களமாக இருந்தது.
தற்போது முழுநீள புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், 'பைரி'. டி.கே புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.துரைராஜ் தயாரித்துள்ளார். சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி நடித்துள்ளனர். ஏ.வி.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசை அமைத்துள்ளார்.
ஜான் கிளாடி எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறும் போது "பைரி என்பது 'பால்கன்' என்ற பருந்தின் பெயர். இக்கதைக்கு அப்பெயர் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்தோம். ஒருவர் 30 புறாக்கள் வளர்த்தால், பந்தயத்துக்கு 3 புறாக்கள் மட்டுமே தேறும். வளர்க்கப்படும் புறாக்களை பைரி தூக்கிக்கொண்டு சென்றுவிடும். அதுபோல், மனிதர்களின் வாழ்க்கையிலும் உயரத்தில் இருப்பவர்களைக் கடந்து சிலபேர் மட்டுமே சாதிக்க முடிகிறது. இதை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. புறா பந்தயம் பற்றி மட்டுமின்றி, ஒரு தாய், மகனுக்கு இடையிலுள்ள பாசத்தைப் பற்றியும் படம் பேசுகிறது. வரும் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்"என்றார்.