தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அடுத்து ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் மதுரை ஐகோர்ட் கிளையில் லோகேஷ் மீது ராஜூ முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‛‛லியோ படத்தில் பெரும்பாலும் வன்முறை காட்சிகள் தான் அதிகம் உள்ளன. கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை லியோ படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்.
லோகேஷ் பெரும்பாலும் வன்முறை, போதைப்பொருள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காட்டுகிறார். அவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். லியோ படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லோகேஷ் தரப்பில் யாரும் ஆஜராகததால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.