பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் முடிவடைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெய்ராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி தொடங்கி உள்ளது. இந்த படத்தை 2024 சம்மருக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளனர். ஆனால் பட அறிவிப்பு தவிர வேறு எந்த அப்டேட்டும் இப்படத்திலிருந்து அறிவிக்கவில்லை. ஏன் பட தலைப்பு கூட வெளியாகவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது, கேப்டன் மில்லர் படம் 2024 பொங்கலுக்கு வெளியாவதால் அதற்கு இடையூறாக தனுஷ் 50 படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம். மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அல்லது பொங்கலுக்கு பிறகு தனுஷ் 50 படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிறார்கள்.
கேப்டன் மில்லர் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.