பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
டைரக்டர் பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தாலும் போதும், நாம் முழு நடிகனாகி விடுவோம் என்பது நடிகர்களின் நம்பிக்கையாகி விட்டது. அந்த அளவுக்கு சாதாரண நடிகர்களை கூட தரமான நடிகராக்கி விடுகிறார் பாலா. அதனால்தான் அவர் படங்களில் நடித்து விட்டு வந்த நடிகர்களுக்கு மார்க்கெட்டில் நல்ல மரியாதையும் இருந்து வருகிறது. விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷாலை அடுத்து இப்போது அதர்வாவும் பாலாவின் படத்தில் நடித்து ஒரு அங்கீகாரத்தை பெற்று விட்டார்.
இந்த நிலையில், பாலா அடுத்து என்ன படம் இயக்கப்போகிறார் என்பதில் கோலிவுட் நடிகர்கள் வட்டாரம் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. அதில் கும்கி படத்தில் நடித்த விக்ரம் பிரபு குறிப்பிடத்தக்கவர். தற்போது இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து பாலாவின் பட்டறைக்குள் பட்டை தீட்டப்பட்டால், கோடம்பாக்கத்தில் நாமும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாகி விடலாம் என்று பாலா படத்தில் அடுத்து தான் நடித்து விட வேண்டும் என்ற முயற்சி எடுப்பதாக கூறப்படுகிறது.
இவர் மட்டுமின்றி கார்த்திக் மகன் கெளதம் போன்ற மேலும் சில ஹீரோக்களின் கவனமும் தற்போது பாலாவின் பக்கம் திரும்பியிருப்பதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.