‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஏஐ தொழில் நுட்பத்தில் பேசிய வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பார்த்திபன். அதில், ஏஐ பார்த்திபன் பேசும்போது, கேயார் அவர்கள் என் மீதும், என் சினிமா ஏதும் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது சமீபத்திய படமான ஆயிரம் பொற்காசுகள் படத்திற்கு புதிய யுக்தியை பயன்படுத்தி இருக்கிறார். அதாவது, ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்றும் அவர் அறிவித்துள்ளார். முதல் நாளில் பெருவாரியான ரசிகர்கள் இந்த படத்தை காண வேண்டும் என்பதால் அவர் இப்படி ஒரு ஐடியாவை செய்திருக்கிறார்.
இந்த விளம்பரத்தை பார்க்கும்போது எனக்கு சரிகமபதநி படத்திற்காக நான் ஒட்டிய ஐம்பதாவது நாள் போஸ்டரில், அப்பாடா என்று எழுதியதும், அதன்பின் கே.பாலசந்தர் அவர்கள் என்னை பாராட்டி ஏழு பக்கங்களில் கடிதம் எழுதியதும் ஞாபகத்துக்கு வந்தது. சின்ன பட்ஜெட் படங்கள் மக்களை சென்றடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும். ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எப்படி எல்லாம் பாடுபட வேண்டும் என்ற வலி அந்த அறிவிப்பில் உள்ளது என்ற வருத்தம் இருந்தாலும், இது போன்ற யுக்தி மூலம் மக்களை நல்ல படங்கள் சென்றடைய ஒரு காரணமாக இருக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார் பார்த்திபன். ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட பார்த்திபன் பேசும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.