பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இதில் நாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்திற்கு எல்ஐசி என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்கு துவக்கத்திலேயே சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தின் தலைப்பு என்னுடையது என இயக்குனர் எஸ்எஸ் குமரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்ஐசி (L I C) என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். இந்த தலைப்பு என்னிடம் உள்ளதால் அதை விக்னேஷ் சிவன் பயன்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன்'' என்கிறார் இயக்குனர் எஸ்எஸ் குமரன்.