கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் துப்பறிவாளன். அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கப் போவதாக 2019ம் ஆண்டு அறிவித்தார்கள். இங்கிலாந்தில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார் விஷால். என்றாலும் அதன் படப்பிடிப்பு நடத்தப்படாமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வரும் ரத்னம் படத்தின் ரிலீசுக்கு பிறகு துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக விஷால் கூறிய நிலையில், 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடித்து வரும் ரத்னம் படத்தை அடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் விஷால், துப்பறிவாளன்-2வுக்கு பிறகுதான் புதிய படத்தில் கமிட்டாவார் என்றும் கூறப்படுகிறது.