20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் துப்பறிவாளன். அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கப் போவதாக 2019ம் ஆண்டு அறிவித்தார்கள். இங்கிலாந்தில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது விஷாலுக்கும் மிஷ்கினுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார் விஷால். என்றாலும் அதன் படப்பிடிப்பு நடத்தப்படாமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வரும் ரத்னம் படத்தின் ரிலீசுக்கு பிறகு துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக விஷால் கூறிய நிலையில், 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடித்து வரும் ரத்னம் படத்தை அடுத்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் விஷால், துப்பறிவாளன்-2வுக்கு பிறகுதான் புதிய படத்தில் கமிட்டாவார் என்றும் கூறப்படுகிறது.