'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு பிரித்விராஜ் தன்னை விட முப்பது வயது குறைந்த ஷீத்தல் என்பவருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் அறிவித்திருந்தனர். அடிக்கடி சோஷியல் மீடியாவில் ஜோடியாக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.
ஆனால், தற்போது பப்லு மற்றும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராமில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால் இருவரும் பிரிந்துவிட்டனரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும், ஷீத்தல் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் ரசிகர் ஒருவர் இருவருக்கும் ப்ரேக்கப்பா? என்று நேரடியாக கேட்க ஷீத்தல் அதற்கு பதில் எதுவும் கூறாமல் அதற்கு லைக் மட்டும் போட்டுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டது உறுதியாகிறது.