வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடிக்க தொடங்கிய போது அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவருக்கும் இடையே காதல் உருவாகி, அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த செப்டம்பர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் அசோக் செல்வனைப் போலவே கீர்த்தி பாண்டியனும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அசோக் செல்வன் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள சபாநாயகன் என்ற படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதேபோல், கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கண்ணகி என்ற படமும் அதே நாளில் திரைக்கு வருகிறது. இப்படி ஒரே நாளில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் நடித்த படங்கள் மோதிக் கொள்வதால் பாக்ஸ் ஆபீஸில் யாருடைய படம் வெற்றி பெறப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.