அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு இருபது ஹீரோ நடிகர்கள் வரை தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நடித்து வெளியாகும் படங்களில் ஒரு சில படங்கள்தான் வெற்றி பெறுகின்றன, சில படங்கள் தோல்வியடைகின்றன. வெற்றி, தோல்வி பொறுத்துதான் அடுத்த படங்களின் வாய்ப்புகளும், சம்பளமும் அமைகின்றன.
இந்நிலையில் சில நடிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன்னணி நடிகர்களைப் பொறுத்தவரையில் விஜய் சேதுபதி ஹிந்தியில், “பார்சி” சீரிஸில் நடித்தார். அத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆர்யா 'த வில்லேஜ்' என்ற சீரிஸில் முதல் முறையாக நடித்துள்ளார். இத்தொடர் இந்த வாரம் நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது.
அருண் விஜய் 2022ல் வெளிந்த 'தமிழ் ராக்கர்ஸ்' சீரிஸில் நடித்தார். ஜெய் நடிப்பில் 'லேபில்' சீரிஸ் கடந்த வாரம் வெளியானது. அதர்வா நடித்த 'மத்தகம்' சீரிஸ் ஆகஸ்ட் மாதம் வெளியானது. விமல் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விலங்கு' சீரிஸ் பரபரப்பான வரவேற்பைப் பெற்றது.
குறிப்பிட்ட இடைவெளியில் இந்த சீரிஸ்கள் வந்தாலும் சினிமாவைப் போன்ற வரவேற்பைப் பெறாமல் இருக்கின்றன. டாப் நடிகர்கள் அல்லது டாப் இயக்குனர்கள் யாராவது இதற்கு முன்பு எடுத்தது போன்ற குட்டிக் கதைகள் இல்லாமல் முழு நீள சீரிஸ்கள் எடுத்தால் மட்டுமே அந்த ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது.