ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' |

1994ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்று உலகப் புகழ் பெற்ற அழகியானார் இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய். அதன் பின் தமிழ்ப் படமான 'இருவர்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் ஹிந்திப் படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வியக்க வைத்தார்.
நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2011ம் ஆண்டு பெண் குழந்தைக்குத் தாயானார். அந்தப் பெண் குழந்தை ஆராத்யாவுக்கு இன்று பிறந்த நாள். தனது அன்புமகளின் பிறந்த நாளை முன்னிட்டு பல விதமான எமோஜிக்களுடன் அன்பான, அசத்தலான வாழ்த்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
“எனது அன்பான தேவதை ஆராத்யா, நான் உன்னை எல்லையில்லாமல், நிபந்தனையில்லாமல், என்றென்றும் நேசிக்கிறேன். எனது வாழ்க்கையின் கட்டுக்கடங்காத அன்பு நீ. உனக்காக நான் சுவாசிக்கிறேன், என் அன்பே. ஹேப்பி ஹேப்பி ஹேப்பியஸ்ட் 12வது பிறந்தநாள். உன்னை கடவுள் எப்போதும் ஆசீர்வதிக்கட்டும். நீயாக இருப்பதற்கு நன்றி, மதிப்பில்லாத அன்பு. உன்னை அதிகமாய் நேசிக்கிறேன், நீதான் மிகச் சிறந்தவள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது குட்டி இளவரசி... உன்னை மிக அதிகமாய் நேசிக்கிறேன்,” என அப்பா அபிஷேக் பச்சன் மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.




