நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
1994ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்று உலகப் புகழ் பெற்ற அழகியானார் இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய். அதன் பின் தமிழ்ப் படமான 'இருவர்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் ஹிந்திப் படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வியக்க வைத்தார்.
நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2011ம் ஆண்டு பெண் குழந்தைக்குத் தாயானார். அந்தப் பெண் குழந்தை ஆராத்யாவுக்கு இன்று பிறந்த நாள். தனது அன்புமகளின் பிறந்த நாளை முன்னிட்டு பல விதமான எமோஜிக்களுடன் அன்பான, அசத்தலான வாழ்த்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
“எனது அன்பான தேவதை ஆராத்யா, நான் உன்னை எல்லையில்லாமல், நிபந்தனையில்லாமல், என்றென்றும் நேசிக்கிறேன். எனது வாழ்க்கையின் கட்டுக்கடங்காத அன்பு நீ. உனக்காக நான் சுவாசிக்கிறேன், என் அன்பே. ஹேப்பி ஹேப்பி ஹேப்பியஸ்ட் 12வது பிறந்தநாள். உன்னை கடவுள் எப்போதும் ஆசீர்வதிக்கட்டும். நீயாக இருப்பதற்கு நன்றி, மதிப்பில்லாத அன்பு. உன்னை அதிகமாய் நேசிக்கிறேன், நீதான் மிகச் சிறந்தவள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது குட்டி இளவரசி... உன்னை மிக அதிகமாய் நேசிக்கிறேன்,” என அப்பா அபிஷேக் பச்சன் மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.