லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் |

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் முதல் பாகம் அளவிற்கு வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. சில பல கதாபாத்திரங்களின் முடிவுகளை மணிரத்னம் மாற்றிவிட்டார் என்பதுதான் படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
அந்தப் படத்தில் கதாநாயகர்களாக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடித்தனர். தெலுங்கில் 'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸ் மார்க்கெட் உயரே போனாலும் அவரால் 'பாகுபலி' அளவிற்கான வெற்றியை இன்னமும் தர முடியவில்லை. அது போலவே 'பொன்னியின் செல்வன் 2'க்குப் பிறகு ஜெயம் ரவி, கார்த்தி நடித்து வெளிவந்த படங்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன.
ஜெயம் ரவி நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த 'இறைவன்' படமும், கார்த்தி நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜப்பான்' படமும் தோல்வியைத் தழுவின. அடுத்து விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. ஜெயம் ரவி, கார்த்தியின் சென்டிமென்ட் விக்ரமையும் பாதிக்குமா அல்லது அவர் மீள்வாரா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.