என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் | 8 ஆண்டுகளாக நான் நினைத்ததை பேச சுதந்திரம் இல்லை : திலீப் வேதனை |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் முதல் பாகம் அளவிற்கு வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. சில பல கதாபாத்திரங்களின் முடிவுகளை மணிரத்னம் மாற்றிவிட்டார் என்பதுதான் படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
அந்தப் படத்தில் கதாநாயகர்களாக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடித்தனர். தெலுங்கில் 'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸ் மார்க்கெட் உயரே போனாலும் அவரால் 'பாகுபலி' அளவிற்கான வெற்றியை இன்னமும் தர முடியவில்லை. அது போலவே 'பொன்னியின் செல்வன் 2'க்குப் பிறகு ஜெயம் ரவி, கார்த்தி நடித்து வெளிவந்த படங்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன.
ஜெயம் ரவி நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த 'இறைவன்' படமும், கார்த்தி நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ஜப்பான்' படமும் தோல்வியைத் தழுவின. அடுத்து விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' நவம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது. ஜெயம் ரவி, கார்த்தியின் சென்டிமென்ட் விக்ரமையும் பாதிக்குமா அல்லது அவர் மீள்வாரா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.