அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன் பிறகு காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது, பென்சில் உட்பட பல படங்களில் நடித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்காமல் இருந்த ஸ்ரீ திவ்யா, தற்போது விக்ரம் பிரபுவுடன் ரெய்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன்பிறகும் புதிய படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் திருமணம் பற்றி கூறும்போது, ‛‛என்னுடைய திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான். என்னுடைய காதலரையே திருமணம் செய்து கொள்வேன். அவர் யார்? எப்போது திருமணம்? என்பதை எல்லாம் அதற்கான நேரம் வரும்போது வெளியிடுவேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா.