'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா |
தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு ஒரே ஆண்டில் இப்படி ஒரு வசூல் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த அளவிற்கு இந்த ஆண்டில் வெளிவந்த சில தமிழ்ப் படங்கள் பெரிய வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ளன.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்த 'வாரிசு' படம் ரூ.300 கோடியும், 'துணிவு' படம் ரூ.200 கோடியும் வசூலித்தன.
அதன்பின் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் ரூ.500 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக மட்டுமே வசூலித்து 200 கோடி வரை ஏமாற்றத்தைத் தந்தது.
அதற்கடுத்து ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படம் மொத்தமாக ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தற்போது விஜய்யின் 'லியோ' படம் ரூ.400 கோடி வசூலைக் கடந்துள்ளதாம்.
தனுஷ் நடித்து வெளிவந்த 'வாத்தி', விஷால் நடித்து வெளிவந்த 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்கள் இந்த ஆண்டில் தலா ரூ.100 கோடி வசூலைக் கடந்த படங்கள்.
50 கோடி வசூலைக் கடந்த படங்களாக உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' ரூ.70 கோடியும், சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' ரூ.80 கோடியும் வசூலித்துள்ளன. இந்த 9 படங்கள் மூலம் மட்டுமே சுமார் ரூ.2050 கோடி வசூல் வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரையில் இல்லாத அளவிலான ஒரு வசூல் தொகை இது. இருப்பினும் ஒரே ஒரு படம் ரூ.1000 கோடி வசூலைக் கடப்பது எப்போது என்ற ஏக்கம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் இருக்கிறது. தெலுங்கு, கன்னடத்தில் அந்த சாதனையைப் புரிந்துவிட்டார்கள். 2024ம் வருடத்தில் அது நடந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.