இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் மலையாள முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் மலையாள சினிமா பிரபலங்களான மின்னல் முரளி புகழ் இயக்குனர் பஷில் ஜோசப், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 2018 படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் மற்றும் நடிகை நிகிலா விமல் ஆகியோர் கலந்து கொண்டனர். தியேட்டர்களுக்கான சினிமா முடிவு பெறுகிறதா என்கிற விவாதம் அப்போது நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பான் இந்தியா படங்கள் குறித்த பேச்சு வந்தபோது, இயக்குனர் பஷில் ஜோசப், மலையாள திரையுலகில் பான் இந்தியா படங்களை எடுப்பது என்பது ரிஸ்க்கான ஒன்று என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய நடிகை நிகிலா விமல் திரையரங்குகளின் வசதி குறைபாடுகள் பற்றி கடுமையாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “ஒரு குடும்பம் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 2000 ரூபாய் செலவு செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது தாங்கள் செலவழிக்கும் பணத்திற்கு திரையரங்குகளில் இருந்து நல்ல தரமான வசதிகளை தான். ஆனால் பல திரையரங்குகள் இந்த விஷயத்தில் ரொம்பவே மோசமாக இருக்கின்றன. குறிப்பாக பல திரையரங்குகளில் தொழில்நுட்பக் குறைபாடுகள் நிறைய இருக்கின்றன. இதனால் படம் பார்க்க வரும் ரசிகர்கள், இதை நாங்கள் வீட்டிலிருந்தே பார்த்து விடுவோமே என வருத்தப்படுகிறார்கள். நான் ஒரு திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது தியேட்டர் ஆபரேட்டர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் திடீரென படத்தின் சத்தத்தை அவர்களாகவே குறைத்து வைத்து விட்டார்கள். அது ஏனென்றே தெரியவில்லை” என்று குற்றம் சாட்டினார்.