குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் |
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் சமீபத்தில் துவங்கியது. அதன்பின் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினிகாந்த் பங்கேற்று நடிக்கிறார். இதனால் அந்த பகுதிகளில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் கூடுகின்றனர்.
கன்னியாகுமரியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தூத்துக்குடி வந்த ரஜினிகாந்த், விமான நிலையத்தில் அளித்த பேட்டி : ‛‛புவனா ஒரு கேள்விக்குறி படப்பிடிப்பிற்கு பிறகு இப்போது தான் இங்கு வருகிறேன்; இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள். எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை என்பதே என் வருத்தம். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்,'' என்றார்.
சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து ரஜினி, விஜய் இடையே பல சர்ச்சைகள் எழுந்தன. ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினி பேசிய காக்கா, கழுகு கதைகள் விஜய்யை மறைமுகமாக ரஜினி பேசியதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இதை வைத்து ரஜினி, விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் சண்டையிட்டு வந்தனர். இந்நிலையில் லியோ படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ரஜினி வாழ்த்தி இருப்பது விஜய் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.