த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' | மூத்த நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் “டான்ஸ் டான்” விழா | மழையில் மூழ்கிய செட்டுகள் : இனி எப்போது ஷூட்டிங்? |
ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதோடு, பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ரம்யா பாண்டியன், சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இமயமலை அருகே உள்ள ரிஷிகேஷிற்கு தான் சென்றிருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தவர், தற்போது பஞ்சாப் பொற்கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு, பொற்கோவிலின் தெய்வீக ஒளியில் மூழ்கி விட்டேன். ஒவ்வொரு அடியிலும் தங்கத்திலான ஆசீர்வாதமான உணர்வு கிடைத்தது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.