ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சண்டை காட்சிகளில் எவ்வளவு பெரிய ரிஸ்க் வேண்டுமானலும் எடுக்கும் எம்ஜிஆருக்கு நடன காட்சிகள் என்றால் பயம். பெரும்பாலும் தனது படங்களில் வரும் பாடல்களில் தனக்கென்று இருக்கும் பிரத்யேக சில ஸ்டெப்களை வைத்து பாடலை முடித்து விடுவார். நடன இக்குனர்களும் அவருக்கேற்ற சில நடன அசைவுகளை வைத்திருப்பார்கள், அதனை வேறு யாருக்கும் பயன்படுத்தவும் மாட்டார்கள்.
இதையும் மீறி அவ்வப்போது சில படங்களின் பாடல்களில் நடனத்தில் அசத்தியிருப்பார் எம்ஜிஆர். அந்த படங்களில் ஒன்று 'குடியிருந்த கோவில்'. எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களை இயக்கிய இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் 1968ம் ஆண்டு வெளியான படம் இது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஜெயலலிதா, ராஜஸ்ரீ, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக எம்ஜிஆர் பஞ்சாபி நடனம் ஆடிய “ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்...” என்ற பாடல் இன்றவுளம் பாடப்பட்டும் மேடைகளில் ஆடப்பட்டும் வருகிறது. ஆலங்குடி சோமு எழுதிய இந்த பாடலுக்கு பஞ்சாபி நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்த இயக்குனர் சங்கர், அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவர் முடியவே முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு வழியாக எம்.ஜி.ஆர் ஒப்புக் கொண்டார். பஞ்சாபி நடன கலைஞர்களிடம் ஒரு வாரம் வரை முறையான பயிற்சி பெற்று இந்த பாடலுக்கு ஆடினார். அது பெரும் வரவேற்பை பெற்றது. குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றுக் கொடுத்தது.