சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
மாவீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர். முருகதாஸின் பிறந்தநாளில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தை ஏற்கனவே விஜய்யை வைத்து தான் இயக்கிய துப்பாக்கி படத்துக்கு இணையான ஒரு வலுவான கதையில் முருகதாஸ் இயக்குவதாகவும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு காக்கிச்சட்டை என்ற படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.