ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனை வெடிக்கும் போதெல்லாம் கர்நாடகாவில் தமிழர்களும், தமிழர்கள் நடத்தும் வியாபார நிறுவனங்கள், தமிழ்ப் படங்களை வெளியிடும் தியேட்டர்கள் பாதிக்கப்படுவது வழக்கம். இன்று கர்நாடகவில் பந்த் நடந்து வருகிறது. காவிரி விவகாரம் வரும்பேதெல்லாம் தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைத் திரையிடுவதை நிறுத்திவிடுவார்கள்.
தமிழகத்திற்கு அதிக மழைநீரைத் தரும் வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இந்த காவிரி விவகாரம் சூடான நிலையிலேயே இருக்கும். நவம்பர் மாதம்தான் அப்பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கன்னடத்திலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். நேரடியாகவும் கர்நாடகா முழுவதும் படம் வெளியாக உள்ளது. அம்மாநில உரிமையாக சுமார் 15 கோடிக்கு வியாபரம் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளியான 'ஜெயிலர்' படம் கர்நாடகவில் மட்டும் சுமார் 75 கோடி வசூலித்துள்ளது. அதைவிட அதிகத் தொகையை 'லியோ' படம் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காவிரி போராட்டம் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளதால் செப்டம்பர் 28 வெளியாக உள்ள தமிழ்ப் படங்கள் மற்றும் வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்கள் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.