ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனை வெடிக்கும் போதெல்லாம் கர்நாடகாவில் தமிழர்களும், தமிழர்கள் நடத்தும் வியாபார நிறுவனங்கள், தமிழ்ப் படங்களை வெளியிடும் தியேட்டர்கள் பாதிக்கப்படுவது வழக்கம். இன்று கர்நாடகவில் பந்த் நடந்து வருகிறது. காவிரி விவகாரம் வரும்பேதெல்லாம் தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைத் திரையிடுவதை நிறுத்திவிடுவார்கள்.
தமிழகத்திற்கு அதிக மழைநீரைத் தரும் வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இந்த காவிரி விவகாரம் சூடான நிலையிலேயே இருக்கும். நவம்பர் மாதம்தான் அப்பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கன்னடத்திலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். நேரடியாகவும் கர்நாடகா முழுவதும் படம் வெளியாக உள்ளது. அம்மாநில உரிமையாக சுமார் 15 கோடிக்கு வியாபரம் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளியான 'ஜெயிலர்' படம் கர்நாடகவில் மட்டும் சுமார் 75 கோடி வசூலித்துள்ளது. அதைவிட அதிகத் தொகையை 'லியோ' படம் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காவிரி போராட்டம் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளதால் செப்டம்பர் 28 வெளியாக உள்ள தமிழ்ப் படங்கள் மற்றும் வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்கள் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.