பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'. இப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக இப்படத்தை செப்டம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் திடீரென தள்ளி வைத்தனர்.
செப்டம்பர் 15ம் தேதி வெளியான 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலருக்கு 'சந்திரமுகி 2' டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை விட மிக அதிகமாக இருந்தது. அந்தப் போட்டியை சமாளிக்க முடியாமல்தான் 'சந்திரமுகி 2' வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் என ஒரு தகவல் வெளியானது. ஆனால், ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கான விளக்கத்தை இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
“பட வெளியீட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக டி.ஐ. செய்பவர்களிடமிருந்து திடீரென போன் வந்தது. படத்தின் 480 ஷாட்களைக் காணவில்லை என்றார்கள். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியானது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிஜி, டிஐ, கிராபிக்ஸ் என பல இடங்களில் அதைத் தேடினோம். 150 டெக்னீஷியன்கள் ஒரு எபிசோடுக்காக வேலை செய்தார்கள். எங்களுக்கு மிகவும் குழம்பிய நிலையில் நான்கைந்து நாட்களுக்குப் பிறகே எங்களுக்கு அந்தக் காட்சிகளை கண்டுபிடிக்க முடிந்தது. வேண்டுமென்றே செய்யவில்லை, எங்களுக்கும் அது ஆபத்தானதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் படத்தைத் தள்ளி வைத்தோம்,” என்றார்.