நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'. இப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக இப்படத்தை செப்டம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் திடீரென தள்ளி வைத்தனர்.
செப்டம்பர் 15ம் தேதி வெளியான 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலருக்கு 'சந்திரமுகி 2' டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை விட மிக அதிகமாக இருந்தது. அந்தப் போட்டியை சமாளிக்க முடியாமல்தான் 'சந்திரமுகி 2' வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் என ஒரு தகவல் வெளியானது. ஆனால், ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கான விளக்கத்தை இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
“பட வெளியீட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக டி.ஐ. செய்பவர்களிடமிருந்து திடீரென போன் வந்தது. படத்தின் 480 ஷாட்களைக் காணவில்லை என்றார்கள். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியானது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிஜி, டிஐ, கிராபிக்ஸ் என பல இடங்களில் அதைத் தேடினோம். 150 டெக்னீஷியன்கள் ஒரு எபிசோடுக்காக வேலை செய்தார்கள். எங்களுக்கு மிகவும் குழம்பிய நிலையில் நான்கைந்து நாட்களுக்குப் பிறகே எங்களுக்கு அந்தக் காட்சிகளை கண்டுபிடிக்க முடிந்தது. வேண்டுமென்றே செய்யவில்லை, எங்களுக்கும் அது ஆபத்தானதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் படத்தைத் தள்ளி வைத்தோம்,” என்றார்.