சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மலையாள திரை உலகில் தற்போது முன்னணியில் இருக்கும் இயக்குனர் ஜீத்து ஜோசப். மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான டுவல்த் மேன் என தொடர் வெற்றிகளால் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக மாறிவிட்டார் ஜீத்து ஜோசப். தற்போது மோகன்லால் நடிப்பில் குறுகிய கால தயாரிப்பாக 'நேரு' என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. வரும் நவம்பரிலேயே இந்த படம் ரிலீஸாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 'நுணக்குழி' என்கிற படத்தை இயக்குகிறார் ஜீத்து ஜோசப். இந்த படத்தில் கதாநாயகனாக மின்னல் முரளி படத்தின் இயக்குனர் பசில் ஜோசப் நடிக்கிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பையும் வசூலையும் அள்ளிய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் இந்த பசில் ஜோசப் தான். இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் ரசிகர்களிடம் இவர் வரவேற்பு பெற்றுள்ளதை தொடர்ந்து தனது கதைக்கு இவர்தான் சரியாக இருப்பார் என முடிவு செய்துள்ளார் ஜீத்து ஜோசப்.




