இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் மலைக்கோட்டை வாலிபன். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெரடி, மணிகண்டன் ஆச்சாரி, ராஜீவ் பிள்ளை உள்பட பலர் நடிக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கிறார்.
படத்தின் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இக்குனர் லியோ ஜோசின் பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பை மோகன்லால் வெளியிட்டார்.
'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் புதுச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைப்பெற்று நிறைவடைந்தது. மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.