விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
ஜெயிலர் படத்தை அடுத்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் விரைவில் நடிக்க உள்ள ரஜினி, அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்க போகிறார். இப்படியான நிலையில் நேற்று கோவையை அடுத்த சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் தம்பதியரின் மகனுக்கு காதணி விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் உடன் கலந்து கொண்டார். இதற்காக மருமகன் விசாகனின் குலதெய்வம் கோயிலான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற ரஜினி, குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு அதன் பிறகு கோவையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ரஜினி, அவரது மனைவி லதா, அண்ணன் சத்யநாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கோவை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் மீடியாக்களை சந்தித்தபோது, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நீங்கள் சிறைக்கு சென்று சந்திக்கப் போவதாக கூறப்படுகிறதே? என்று கேள்வி விடுத்த போது, அங்கு போவதாக இருந்தது. ஆனால் இங்கே பேமிலி பங்க்ஷன் இருந்ததால் போக முடியவில்லை என்று கூறினார் ரஜினி.