பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் |
விஜய் டிவி சீரியல்களில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ள ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த் தற்போது தெலுங்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஷ்ரவந்திகா விசுவல் கம்யூனிகசேன் படித்து முடித்த பின் ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். அதன் பின் விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்', 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், தமிழில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வந்த ஷ்ரவந்திகாவுக்கு தெலுங்கு சீரியலில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜீ தெலுங்கு சேனலில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'ஜபிலி கோசம் ஆகாசமல்லே' என்ற தொடரில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஷ்ரவந்திகா நடித்து வருகிறார். அதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் தெலுங்கு ரசிகர்களுடன் தமிழ் ரசிகர்களும் சேர்ந்து ஷ்ரவந்திகாவை வாழ்த்தி வருகின்றனர்.