100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் | இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? | 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்? | மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் |

2021ம் ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருது 'புஷ்பா' தெலுங்குப் படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. 'புஷ்பா' திரைப்படம் செம்மரக் கடத்தலைப் பற்றிய ஒரு படம். படத்தில் அல்லு அர்ஜுன் ஏற்று நடித்த கதாபாத்திரம் ஒரு சமூக விரோதி கதாபாத்திரம். செம்மரங்களைக் கடத்துவது, ஆட்களைக் கொல்வது, காவல் துறையை எதிர்ப்பது என ஒரு முழு 'கிரிமினல்' கதாபாத்திரம். இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்குவதா என சர்ச்சைகளும் எழுந்துள்ளது.
ஆனால், கிரிமினல் கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கூட அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கியிருக்கிறார்கள்.
1987ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் படமான 'நாயகன்' படத்தில் மும்பை தாதாவாக நடித்த கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை விட சிறந்த நடிப்பை கமல்ஹாசன் வெளிப்படுத்திய 'சாகர சங்கமம், ஸ்வாமி முத்யம்' ஆகிய படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.
1994ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படமான 'பண்டிட் குயின்' படத்தில் கொள்ளைக்காரி பூலான் தேவி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சீமா பிஸ்வாஸ் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதைப் பெற்றார்.
1997ம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமான 'களியாட்டம்' படத்தில் மனைவியைக் கொன்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சுரேஷ் கோபி தேசிய விருதைப் பெற்றார்.
அந்தக் காலங்களில் அதைப் பற்றியெல்லாம் யாரும் பெரிதாகப் பேசவில்லை, விமர்சிக்கவில்லை. ஆனால், தற்போது யு டியுப், சமூக வலைத்தளங்கள், டிவி விவாதங்கள் என பலவற்றில் 'புஷ்பா' படத்தில் கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜுன் தேசிய விருது பெற்றது குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்கள்.




