ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
'அப்டேட்' கேட்பதே அஜித் ரசிகர்களுக்குப் பெரும் வேலையாகப் போய்விட்டது. 'விடாமுயற்சி' படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆன பின்னும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது.
அஜித்தும் பைக்கில் உலக டூர் என அடிக்கடி கிளம்பிவிடுவதால் படம் எப்போது ஆரம்பமாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு நேற்று நடைபெற்ற 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அப்டேட் கொடுத்துள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என நேற்று பேசும் போது அவர் தெரிவித்துள்ளார். 'விடாமுயற்சி' படம் தங்களுக்கு முக்கியமான படம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கதைத் திருட்டு சிக்கல் என பட வெளியீட்டின் போது எதுவும் வந்துவிடாமல் இருக்க சில வெளிநாட்டுத் திரைப்படங்களின் உரிமையை வாங்கியுள்ளதாகவும் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.