மறைந்த தாயார் ஸ்ரீதேவி அணிந்த நீல நிற சேலையில் கவனம் பெற்ற ஜான்வி கபூர்! | காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண் | தான் இறந்து விட்டதாக வதந்தி! பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்!! | செக் மோசடி வழக்கிலிருந்து ராம்கோபால் வர்மாவை விடுவித்த நீதிமன்றம் | 'காந்தாரா சாப்டர்-1' பட விழாவில் கண்ணீர் விட்ட ருக்மணி வசந்த்! | சிவராஜ்குமாரை நேரில் சென்று சந்தித்த மஞ்சு மனோஜ் | சூர்யாவின் 'கருப்பு' படம் குறித்து நட்டி நடராஜ் வெளியிட்ட தகவல்! | ஆங்கிலம் சரளமாக பேச முடியவில்லை : லப்பர் பந்து சுவாசிகா கவலை | திரௌபதி 2 படப்பிடிப்பு நிறைவு | 2026 ஜூன் 12ல் 'ஜெயிலர் 2' ரிலீஸ் : ரஜினிகாந்த் தகவல் |
90-கள் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார் நடிகர் அப்பாஸ். அதன்பின் சரிவர படவாய்ப்புகள் கிடைக்காததால் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்று செட்டிலானார். அங்கே பெட்ரோல் பங்க் வேலை, மெக்கானிக் என வேலை கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த செய்தியானது சோஷியல் மீடியாக்களில் பரவ பலரும் அப்பாஸின் தற்போது நிலையை கண்டு வருத்தமடைந்தனர். அவருக்கு ஒரு கம்பேக் கிடைக்கக் கூடாதா? என்று கூட கடவுளை பிரார்த்தித்தனர்.
இந்நிலையில், அப்பாஸ் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அப்பாஸை 90களின் கனவு நாயகன் என பெருமைபடுத்தி அழைக்கின்றனர். மேடைக்கு வந்த அப்பாஸ் மாகாபாவுடன் கலாட்டா, சிறுமியுடன் குத்தாட்டம் என எனர்ஜிடிக்காக இருப்பதை பார்த்து ரசிகர்களும் உற்சாகத்துடன் அந்த எபிசோடை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.