பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

90-கள் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார் நடிகர் அப்பாஸ். அதன்பின் சரிவர படவாய்ப்புகள் கிடைக்காததால் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்று செட்டிலானார். அங்கே பெட்ரோல் பங்க் வேலை, மெக்கானிக் என வேலை கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த செய்தியானது சோஷியல் மீடியாக்களில் பரவ பலரும் அப்பாஸின் தற்போது நிலையை கண்டு வருத்தமடைந்தனர். அவருக்கு ஒரு கம்பேக் கிடைக்கக் கூடாதா? என்று கூட கடவுளை பிரார்த்தித்தனர்.
இந்நிலையில், அப்பாஸ் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அப்பாஸை 90களின் கனவு நாயகன் என பெருமைபடுத்தி அழைக்கின்றனர். மேடைக்கு வந்த அப்பாஸ் மாகாபாவுடன் கலாட்டா, சிறுமியுடன் குத்தாட்டம் என எனர்ஜிடிக்காக இருப்பதை பார்த்து ரசிகர்களும் உற்சாகத்துடன் அந்த எபிசோடை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.