'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை மற்றும் பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவ்வப்போது சில புகார்கள் வெளியாவது உண்டு. இதுபோன்ற நிகழ்வுகள் பல பிரபலங்களுக்கும் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. இதுகுறித்து அவர்கள் தங்கள் விமர்சனங்களையும், கண்டனங்களையும், எச்சரிக்கையையும் தெரிவிக்கவும் தவறுவதில்லை. அந்த வகையில் இது போன்ற ஒரு மோசமான அனுபவத்தை சென்னை விமான நிலையத்தில் எதிர்கொண்டிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ஷங்கரின் பாய்ஸ் மற்றும் துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி கே.சந்திரன். சமீபத்தில் வெளியூர் சென்று விட்டு சென்னை விமான நிலையம் திரும்பிய போது இவரது உடைமைகள் லக்கேஜ் பிரிவிலிருந்து இவரது கைகளுக்கு வந்து சேர்வதற்கு நீண்ட நேரம் ஆனது. இது குறித்து அவருக்கு சரியான பதில் அளிக்கவும் அங்கு யாரும் தயாராக இல்லை.. “என்னுடைய 49 வருட பயண அனுபவத்தில் இதுபோன்று ஒரு மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதில்லை” என்று விரக்தியாக கூறியுள்ளார் ரவி கே.சந்திரன்.