தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை மற்றும் பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவ்வப்போது சில புகார்கள் வெளியாவது உண்டு. இதுபோன்ற நிகழ்வுகள் பல பிரபலங்களுக்கும் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. இதுகுறித்து அவர்கள் தங்கள் விமர்சனங்களையும், கண்டனங்களையும், எச்சரிக்கையையும் தெரிவிக்கவும் தவறுவதில்லை. அந்த வகையில் இது போன்ற ஒரு மோசமான அனுபவத்தை சென்னை விமான நிலையத்தில் எதிர்கொண்டிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ஷங்கரின் பாய்ஸ் மற்றும் துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி கே.சந்திரன். சமீபத்தில் வெளியூர் சென்று விட்டு சென்னை விமான நிலையம் திரும்பிய போது இவரது உடைமைகள் லக்கேஜ் பிரிவிலிருந்து இவரது கைகளுக்கு வந்து சேர்வதற்கு நீண்ட நேரம் ஆனது. இது குறித்து அவருக்கு சரியான பதில் அளிக்கவும் அங்கு யாரும் தயாராக இல்லை.. “என்னுடைய 49 வருட பயண அனுபவத்தில் இதுபோன்று ஒரு மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதில்லை” என்று விரக்தியாக கூறியுள்ளார் ரவி கே.சந்திரன்.