10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

சென்னை : இஸ்ரோ மற்றும் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என, தமிழக நாடார் சங்கம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டது. இதில் உள்ள விக்ரம் லேண்டர் நாளை(ஆக., 23) தரையிறங்க உள்ளது. இதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல்படம் என டீ ஆத்தும் புகைப்படம் ஒன்றை கிண்டலாக பதிவிட்டார் நடிகர் பிரகாஷ்ராஜ். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மழுப்பல்
இதற்கு பிரகாஷ்ராஜ், ‛‛உலகில் எந்த ஒரு மூலைக்கு சென்றாலும் அங்கு ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார். அதை நினைவுப்படுத்தும் விதமாகத்தான், நிலவிலும் கூடிய சீக்கிரமே மலையாளி ஒருவர் டீக்கடை வைக்க போகிறார் என்பதை சொல்லும் வகையில் இதை நான் குறிப்பிட்டு இருந்தேன். நான் சொன்ன இந்த ஜோக் உங்களுக்கு புரியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அது உங்கள் பிரச்சனை'' என்று மழுப்பலாக தெரிவித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

தேச துரோக வழக்கில் பிரகாஷ் ராஜை கைது செய்ய வேண்டும் என, தமிழக நாடார் சங்கம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நாடார் சங்க தலைவர் முத்துரமேசு அளித்த மனு : சினிமா நடிகர் பிரகாஷ்ராஜ், 20ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் கேலிச்சித்திர பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய படங்களை கிண்டல் செய்யும் வகையில், முன்னாள் இஸ்ரோ தலைவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கைலாச வடிவு சிவன், நிலாவில் டீ ஆற்றுவது போல கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார்.
இந்த கேலிச்சித்திரம் விஞ்ஞானிகளை கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் தியாகத்தை போற்றவில்லை என்றாலும் சாதனைகளை வாழ்த்தவில்லை என்றாலும் அவர்களது திறமையை கேலி கிண்டல் செய்வது தேச விரோதமாகும். எனவே பிரகாஷ்ராஜை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும். அவரது ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்களை பயன்படுத்த தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.