Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இஸ்ரோவை இழிவுப்படுத்திய நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

22 ஆக, 2023 - 19:07 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-actor-Prakash-Raj-for-defaming-ISRO-in-commissioners-office

சென்னை : இஸ்ரோ மற்றும் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என, தமிழக நாடார் சங்கம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டது. இதில் உள்ள விக்ரம் லேண்டர் நாளை(ஆக., 23) தரையிறங்க உள்ளது. இதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல்படம் என டீ ஆத்தும் புகைப்படம் ஒன்றை கிண்டலாக பதிவிட்டார் நடிகர் பிரகாஷ்ராஜ். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மழுப்பல்
இதற்கு பிரகாஷ்ராஜ், ‛‛உலகில் எந்த ஒரு மூலைக்கு சென்றாலும் அங்கு ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார். அதை நினைவுப்படுத்தும் விதமாகத்தான், நிலவிலும் கூடிய சீக்கிரமே மலையாளி ஒருவர் டீக்கடை வைக்க போகிறார் என்பதை சொல்லும் வகையில் இதை நான் குறிப்பிட்டு இருந்தேன். நான் சொன்ன இந்த ஜோக் உங்களுக்கு புரியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அது உங்கள் பிரச்சனை'' என்று மழுப்பலாக தெரிவித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.



தேச துரோக வழக்கில் பிரகாஷ் ராஜை கைது செய்ய வேண்டும் என, தமிழக நாடார் சங்கம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நாடார் சங்க தலைவர் முத்துரமேசு அளித்த மனு : சினிமா நடிகர் பிரகாஷ்ராஜ், 20ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் கேலிச்சித்திர பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய படங்களை கிண்டல் செய்யும் வகையில், முன்னாள் இஸ்ரோ தலைவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கைலாச வடிவு சிவன், நிலாவில் டீ ஆற்றுவது போல கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார்.

இந்த கேலிச்சித்திரம் விஞ்ஞானிகளை கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் தியாகத்தை போற்றவில்லை என்றாலும் சாதனைகளை வாழ்த்தவில்லை என்றாலும் அவர்களது திறமையை கேலி கிண்டல் செய்வது தேச விரோதமாகும். எனவே பிரகாஷ்ராஜை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும். அவரது ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்களை பயன்படுத்த தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
உண்மையான உறவுகளின் பிரதிபலிப்பு :  கவனம் ஈர்த்த ‛இறுகப்பற்று' வீடியோஉண்மையான உறவுகளின் பிரதிபலிப்பு : ... அனுமதியின்றி கட்டடம் : நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பாய்கிறது நடவடிக்கை? அனுமதியின்றி கட்டடம் : நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

R Kay - Chennai,இந்தியா
24 ஆக, 2023 - 04:05 Report Abuse
R Kay இருப்பைக்காட்டிக்கொள்ள இதுபோல உலரும் மெண்டல் மாமேதை. முதலில் தன முதுகில் உள்ள அழுக்கை சுத்தம் செய்துகொள்ளட்டும் இந்த சாபக்கேடு.
Rate this:
AriyaThangaErulappan - Chennai ,இந்தியா
24 ஆக, 2023 - 01:15 Report Abuse
AriyaThangaErulappan கருத்துச் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. பிரகாஷ் ராஜ் கூறிய விளக்கம் அழகாகவும் நாட்டின் நடக்கும், அவலங்களையும் தெளிவாக கூறி உள்ளார். இதில் உங்களுக்கு போதுமான மன பக்குவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
Rate this:
குமார் - Virudhunagar ,இந்தியா
23 ஆக, 2023 - 13:08 Report Abuse
குமார் தேசப்பற்றட்டவன் இவனுக்கு கண்டிப்பாக தன்டனை வழங்க வேண்டும்.குடியரிமை பறிக்கப்பட வேண்டும்.
Rate this:
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
23 ஆக, 2023 - 11:10 Report Abuse
JAGADEESANRAJAMANI வில்லத்தனமாக ஜோக்கடிக்கக்கூடாது. நாட்டின் உயர்வுக்கு பாடுபடும் நமது விஞ்சானிகளை ஊக்கப்படுத்தவேண்டும். மாதிரி முதிர்ச்சியில்லாமல் கேவலப்படுத்தும் நபர்களை தண்டிக்கவேண்டும்.
Rate this:
Devan - Chennai,இந்தியா
23 ஆக, 2023 - 08:24 Report Abuse
Devan இதற்கு மட்டும் அல்ல. ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் இவர் போன்ற ஆட்களை முச்சந்தியில் நிற்க வைத்து கேள்வி கேட்க வேண்டும். ஊட்டியில் அது நிலத்தில் ரோடு போட்டுக் கொண்டு யாரும் அதில் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்து மறிக்கும் அறிவுஜீவி உரிமை பெறாமல் பங்களா கட்டிக் கொண்டு பணம் கொடுத்து மின் இணைப்பு வாங்கிய குற்றத்திற்கும் சேர்த்து தண்டனை கொடுக்கப்பட வேண்டும்,
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in