தங்கலான் படப்பிடிப்பிற்கு பிறகு 5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன் : மாளவிகா மோகனன் | 'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் |
சென்னை : இஸ்ரோ மற்றும் இந்திய விஞ்ஞானிகளை கிண்டல் செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என, தமிழக நாடார் சங்கம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டது. இதில் உள்ள விக்ரம் லேண்டர் நாளை(ஆக., 23) தரையிறங்க உள்ளது. இதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் எடுத்த முதல்படம் என டீ ஆத்தும் புகைப்படம் ஒன்றை கிண்டலாக பதிவிட்டார் நடிகர் பிரகாஷ்ராஜ். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மழுப்பல்
இதற்கு பிரகாஷ்ராஜ், ‛‛உலகில் எந்த ஒரு மூலைக்கு சென்றாலும் அங்கு ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார். அதை நினைவுப்படுத்தும் விதமாகத்தான், நிலவிலும் கூடிய சீக்கிரமே மலையாளி ஒருவர் டீக்கடை வைக்க போகிறார் என்பதை சொல்லும் வகையில் இதை நான் குறிப்பிட்டு இருந்தேன். நான் சொன்ன இந்த ஜோக் உங்களுக்கு புரியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அது உங்கள் பிரச்சனை'' என்று மழுப்பலாக தெரிவித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
தேச துரோக வழக்கில் பிரகாஷ் ராஜை கைது செய்ய வேண்டும் என, தமிழக நாடார் சங்கம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நாடார் சங்க தலைவர் முத்துரமேசு அளித்த மனு : சினிமா நடிகர் பிரகாஷ்ராஜ், 20ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் கேலிச்சித்திர பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய படங்களை கிண்டல் செய்யும் வகையில், முன்னாள் இஸ்ரோ தலைவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கைலாச வடிவு சிவன், நிலாவில் டீ ஆற்றுவது போல கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார்.
இந்த கேலிச்சித்திரம் விஞ்ஞானிகளை கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் தியாகத்தை போற்றவில்லை என்றாலும் சாதனைகளை வாழ்த்தவில்லை என்றாலும் அவர்களது திறமையை கேலி கிண்டல் செய்வது தேச விரோதமாகும். எனவே பிரகாஷ்ராஜை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும். அவரது ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்களை பயன்படுத்த தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.